எல்லே போட்டியில் அட்டாளைச்சேனை, மஹாஓயா பிரதேச செயலக அணிகள் சம்பியன்

அம்பாறை மாவட்ட பிரதேச செயலகங்களுக்கிடையில் நடைபெற்ற எல்லே சுற்றுப்போட்டி பாலமுனை பொதுவிளையாட்டு மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை (29.03.2019) அம்பாறை மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.அமீர் அலி தலைமையில் நடைபெற்றது.

இதில் ஆண்கள் பிரிவில் அட்டாளைச்சேனைப் பிரதேச செயலகமும்,பெண்கள் பிரிவில் மஹாஓயா பிரதேச செயலகமும் இவ்வாண்டுக்கான சம்பியனாக தெரிவாகினர்.

40 பந்து வழங்கப்பட்டு நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதலில் ஆடிய தெஹியத்தக்கண்டி பிரதேச செயலக அணியினர் குறிப்பிட்ட பந்துகள் நிறைவில் 5 புள்ளிகளைப் பெற்றுக் கொண்டனர்.

பதிலுக்கு வெற்றி பெற விளையாடிய அட்டாளைச்சேனைப் பிரதேச செயலக அணியினர் 22 பந்துகளில் 6 புள்ளிகளைப் பெற்று வெற்றி பெற்று இவ்வாண்டுக்கான சம்பியனாகினர்.

பெண்கள் பிரிவின் இறுதிப் போட்டியில் முதலில் விளையாடிய உகண பிரதேச செயலக அணியினர் 40 பந்துகளுக்கு 2 புள்ளிகளைப் பெற்றுக் கொண்டனர்.

பதிலுக்கு வெற்றி பெற விளையாடிய மஹாஓயா பிரதேச செயலக அணியினர் 35 பந்துகளில் 3 புள்ளிகளைப் பெற்று வெற்றி பெற்று இவ்வாண்டுக்கான பெண்கள் பிரிவின் சம்பியனாக தெரிவாகினர்.

அட்டாளைச்சேனைப் பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் எம்.எச்.எம்.அஸ்வதின் உதவியுடன் நடைபெற்ற மாவட்ட எல்லேப் போட்டியில் பலர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

(ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்)

Thu, 04/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை