நுவரெலியா வசந்த காலத்தை முன்னிட்டு நடைபெற்ற மோட்டார் ஒட்டப் போட்டிகள்

நுவரெலியா வசந்த காலத்தை முன்னிட்டு நடைபெற்ற மோட்டார் ஒட்டப் போட்டிகள் (16ம் திகதி) நுவரெலியா கிரகறி வாவியின் ஒடு பாதையில் நடைபெற்றது. இந்த போட்டிகளை காண்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, விளையட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களும் நுவரெலியா மாநகர சபை முதல்வர் சந்தணலால் கருணாரத்ன ஆகியோரும் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசில்களும் பிரதமரால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த போட்டியில் இலங்கையின் முன்னணி வீரர்களான ஜாக் குணவர்தன ,சான் தசநாயக்க, ரொமேஸ் புல்ஜோன்ஸ் ஆகிய வீரர்களும் முப்படைகளின் போட்டியாளர்களும் கலந்து கொண்டனர்.தேசிய மட்டத்தில் அதி கூடிய புள்ளிகளை பெற்று ஜாக் குணவர்தன தெரிவானார்.இந்த போட்டிகளுக்கான ஏற்பாடுகளை நுவரெலியா மோட்டார் ஓட்ட சங்க தலைவர் உஜித சமரவிக்கிரம தலைமையிலான குழுவினர் மேற்கொண்டிருந்தனர்.போட்டி நிகழ்வுகளையும் படங்களில் காணலாம்.

படங்கள்: நுவரெலியா தினகரன் நிருபர்

Thu, 04/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை