பெயர் விபரங்களை காட்சிப்படுத்த சாரதிகளுக்கு அறிவுறுத்தல்

நகர்ப்புறங்கள் மற்றும்; பொது இடங்களில் தமது வாகனங்களை நிறுத்தி செல்வோர் தமது தொலைபேசி இலக்கம் மற்றும் பெயர் உள்ளிட்ட விடயங்களை காட்சிப்படுத்தப்படுத்துமாறு, பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொதுவிடங்களுக்கு அருகில் ஆங்காங்கே நிறுத்திவிட்டு செல்லப்பட்ட வாகனங்கள் தொடர்பில், அவை சந்தேகத்திற்கிடமான வாகனங்கள் என தெரிவித்து, குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவுக்கு பெருமளவான தொலைபேசி அழைப்புகள் கிடைத்துள்ளதாகவும், இதன்போது குறித்த வாகனங்களை பரிசோதனை செய்ய முற்படும் நிலையில் அதன் சாரதிகள் முன்னிலையாவதாகவும் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இதன் காரணமாக, பொதுமக்கள், பொலிசார் மற்றும் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் உள்ளிட்டோருக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்க்கும் வகையில் குறித்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, தமது வாகனங்களை பொது இடங்களில் நிறுத்திவிட்டு; செல்லும் சாரதிகள் தமது தொலைபேசி இலக்கம் மற்றும் பெயர் ஆகிய விபரங்களை வாகனங்களின் முன் கண்ணாடியில் காட்சிப்படுத்தப்படுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tue, 04/23/2019 - 13:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை