கட்டுநாயக்க விமான நிலைய பணிகள் வழமைக்கு திரும்பியுள்ளன

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய வாகனத் தரிப்பிடத்தில் சந்தேகத்திற்கிடமான காரொன்று காணப்பட்டதை தொடர்ந்து, அவ்விமான நிலையத்திற்கு முன்பாகவுள்ள வீதி தற்காலிகமாக மூடப்பட்டது.

அங்கு முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளை தொடர்ந்து சந்தேகத்திற்கிடமான எதுவும் காணப்படாமையினால் குறித்த வீதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பணிகள் வழமைக்குத் திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Thu, 04/25/2019 - 11:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை