‘குதிரை’ என திட்டியவர் சிறை செல்ல வாய்ப்பு

முன்னாள் கணவரின் இரண்டாம் மனைவியை ‘குதிரை’ என்று குறிப்பிட்ட பிரிட்டன் பெண் துபாயில் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையை எதிர்நோக்கியுள்ளார்.

முன்னாள் கணவரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காகத் துபாய் சென்ற 55 வயது லாலிஹ் சஹ்ரவேஷ் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 2016இல் மீண்டும் மறுமணம் செய்துகொண்ட கணவரின் பேஸ்புக் படங்களில் சஹ்ரவேஷ் எழுதிய இரு பதிவுகள் தொடர்பில் அவர் குற்றஞ்சாட்டப்பட்டார்.

விவாகரத்துக்குப் பின் லண்டனில் வசித்து வந்த சஹ்ரவேஷ் கணவரின் இரண்டாம் திருமணத்தைப் பற்றி பேஸ்புக் வழியாக அறிந்து கொண்டார். அப்போது கணவரைத் திட்டி, அவரின் மணப்பெண் பார்ப்பதற்கு குதிரை போல இருப்பதாக எழுதினார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இணையக் குற்றச் சட்டங்களின்கீழ் சமூக ஊடகங்களில் அவதூறாகப் பதிவுகள் செய்வது குற்றம். குற்றம் நிரூபிக்கப்பட்டால் சஹ்ரவேஷுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் 65,000 டொலர் அபராதம் விதிக்கப்படலாம்.

Tue, 04/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை