உலகக் கிண்ணத்திற்காக ஐ.பி.எல். இல் இருந்து வெளிநாட்டு வீரர்கள் வெளியேற்றம்

வெளிநாட்டு வீரர்களால் ஐ.பி.எல் போட்டித் தொடர் களைகட்டிவந்த நிலையில், அடுத்துவரும் நாட்களில் முக்கிய நடத்திர வீரர்கள் உலகக் கிண்ணப் போட்டிக்கு தயாராவதற்காக தாய்நாடு திரும்புகின்றனர். இதனால், ஐபிஎல் போட்டி களையிழந்துவிடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ப்ளே-ஆப் சுற்று ஆரம்பித்த பின் நட்சத்திர வீரர்கள் இல்லாமல் போட்டி சுவாரஸ்யம் குறைந்துவிடக்கூடாது என்பதற்காக மாற்று வீரர்களை கொண்டுவரவும் அணிகளின் நிர்வாகிகள் தயாராகி வருகின்றனர்.

ஐ.பி.எல் போட்டியில் விளையாடும் 8 அணிகளில் நியூசிலாந்து, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், மே.இ.தீவுகள், ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளின் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

மே 30ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள உலகக் கிண்ண போட்டிக்கு தேர்வாகியுள்ள வீரர்கள் தங்களை தயார் படுத்திக்கொள்ள பயிற்சி முகாமுக்கு தங்கள் தாய்நாட்டு அணிக்கு விரைவில் திரும்ப உள்ளனர்.

குறிப்பாக அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மே 2ஆம் திகதியில் இருந்து பயிற்சி முகாம்மை ஆரம்பிப்பதால், உலகக் கிண்ணத்திற்கான அணிக்கு தேர்வாகியுள்ள வீரர்கள் புறப்படுகின்றனர்.

Sat, 04/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை