அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் ஊடகவியலாளர் விருது விழா

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனம் நடாத்திய 'கிழக்கு மாகாண ஊடகவியலாளர் விருது விழா' நேற்று (31) பி.ப.2.30 மணிக்கு கல்முனை ஆஸாத் பிளாசா வாவேற்பு மண்டபத்தில் சம்மேளனத்தின் தலைவர் கலாபூஷணம் மீரா எஸ்.இஸ்ஸடீன் தலைமையில் நடைபெற்றது.

இந்த விழாவில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும்,கைத்தொழில்,வர்த்தகம்,நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள் குடியேற்ற,கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் தொழிற் பயிற்சி,திறன் அபிவிருத்தி அமைச்சர் றிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்.

விஷேட அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களான பாலித தேவரப்பெரும, ஸ்ரீயானி விஜய விக்கிரம, ஏ.எல்.எம்.நஸீர், பேராசிரியர் எஸ்.எம்.எம்.இஸ்மாயில் ஆகியோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த விருது விழாவில் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனதின் உறுப்பினர்கள் 18 பேரும்,அம்பாறை,மட்டக்களப்பு,திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ்,முஸ்லிம்,சிங்கள ஊடகவியலாளர்கள் 28 பேரும்.சமூக சேவைக்காக 4 பேருமாக 50 பேர் பொன்னாடை போர்த்தி,மாலை.பதக்கம் என்பன அணிவித்து விருதும்.சாண்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

Mon, 04/01/2019 - 12:47


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை