நாளை சர்வ கட்சி மாநாடு, சர்வ மத கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு

RSM
நாளை சர்வ கட்சி மாநாடு, சர்வ மத கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு-President Call For All Party Conference and All Religion Meeting

நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் நிலைமை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு நாளை (25) சர்வ கட்சி மற்றும் சர்வ மத மாநாட்டிற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.

நாளை மு.ப.10.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் சர்வ கட்சி மாநாடு இடம்பெறவுள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நாளை பி.ப 4.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் சர்வ மத மாநாடு இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

Wed, 04/24/2019 - 18:11


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை