வரவு - செலவு திட்ட இறுதி வாக்கெடுப்பிலும் ஜே.வி.பி எதிராக வாக்களிக்கும்

ஐக்கிய தேசிய கட்சியினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2019 ஆம் ஆண்டுகான வரவு செலவு திட்டத்திற்கான இறுதி வாக்கெடுப்பிலும் ஜே.வி.பி எதிர்த்து வாக்களிக்கும் என ஜே.வி.பியின் தேசிய அமைப்பாளர் பிமல் ரத்னாயக்கா தெரிவித்தார்.அதேநேரத்தில் இம்முறை சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தில் ஒரு வாக்கெடுப்பில் கையாலாகாத அரசு தோல்வி கண்டுள்ள நிலையில் முழு வரவு செலவு திட்டத்தினையும் தோல்வியடைய செய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் குழுவினரின் கைகளில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜே.வி.பியின் கொத்மலை பிரதேச சபைக் கூட்டம் பூண்டுலோயா நகரில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட பின் ஊடகங்களுக்கு கருத்துக்கள் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு ஊடகவியளர்க எழுப்பிய கேள்விக்கு மேலும் கருத்துரைத்த அவர், நாட்டின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் கூட்டு நடவடிக்கையை மக்களும் நாமும் ஏற்றுக்கொண்டதாக இல்லை.

இந்த நிலையில் 2019 ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை ஐ.தே.க அரசு முன்வைத்து மூன்று வாக்கெடுப்பில் ஒன்று தோல்வி கண்டுள்ளது.

கட்சி என்ற உணர்வுடன் செயற்படாது மாங்காய் கொட்டைகளை சேகரிக்க சென்ற ஐ.தே.க உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு சமூகம் தராததால் வாக்கெடுப்பில் தோல்வி கண்டனர்.

அதேநேரத்தில் ஊழல்களை கொண்டு செயற்படும் ஐ.தே.க அரசாங்கம் வரவு செலவு திட்டத்தின் முதல் வாக்கெடுப்பின் போது ஜனாதிபதி தரப்பில் 20 உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு வருகை தராததால் வெற்றி பெற்றனர். இது ஒரு நாடகமாகவும் இருந்திருக்கலாம்.

ஆனால் மக்கள் விடுதலை முன்னணியான ஜே.வி.பி தொடர்ந்தும் தனது நிலைப்பாட்டில் வரவு செலவு திட்டத்தை தோல்வியடைய செய்ய எதிர்த்தே வாக்களிக்கும் இதில் மாற்றமில்லை.

இருந்த போதிலும் உள்ளூராட்சி சபைகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான முக்கிய வாக்கெடுப்பு தோல்வி கண்டுள்ளது. இதனால் உள்ளூராட்சி சபைகள் அதன் உத்தியோகஸ்தர்கள் மற்றும் சபைகளின் நடவடிக்கைகளுக்கு சில பாதிப்புகள் ஏற்படும் வாய்புள்ளது.

இந்த தருணத்தில் எதிர்வரும் ஐந்தாம் திகதி இடம்பெறவுள்ள இறுகட்ட வாக்கெடுப்பு பலரின் எதிர்பார்பாக அமைந்துள்ளது. அந்தவகையில் பிரதமர் ரணிலின் ஆட்சிக்கு முடிவுகட்டும் வகையில் இந்த வரவுசெலவு திட்டத்தை வெற்றியடைய வைப்பதும் அல்லது தோல்வியடைய வைப்பதும் ஐனாதிபதி மைத்திரி தலைமையிலான குழுவினரிடத்தில் தங்கியுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

 ஹற்றன் சுழற்சி நிருபர்

Tue, 04/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை