நியூயோர்க் தேவாலயத்திற்கு பெற்றோலுடன் வந்தவர் கைது

நியூயோர்க்கின் செயின்ட் பெட்ரிக்ஸ் தேவாலத்திற்கு பெட்ரோல் நிரப்பிய இரு கேன்கள் மற்றும் தீமூட்டும் கருவியுடன் வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்ட அவர், கார் வண்டியில் எரிபொருள் தீர்ந்ததால் எரிபொருளை எடுத்துக் கொண்டு தேவாலயத்தின் ஊடாக குறுக்கு வழியால் வந்ததாக பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார். எனினும் அவரது பதில் பொருத்தமில்லமால் இருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தேவாலய காவலர்களுடன் மோதலில் இடுபட்டதை அடுத்து அங்கு விரைந்த பொலிஸார் 37 வயதான அந்த நபரை கைது செய்துள்ளனர். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள புகழ்பெற்ற நொட்ரா-டாம் தேவாலயத்தில் தீ ஏற்பட்டு இரண்டு தினங்களிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

1878 ஆம் ஆண்டு கட்டப்பட்ட செயின்ட் பெட்ரிக்ஸ் தேவாலத்தில் பாரிய புனர்நிர்மாணப் பணிகள் 2015 ஆம் ஆண்டு பூர்த்தி செய்யப்பட்டது.

Fri, 04/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை