பிரிட்டன் பாராளுமன்றத்தில் பிரெக்சிட் தொடர்பான விவாதங்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் 11 சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆடைகளைக் களைந்து ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.
பொதுமக்கள் அமரும் கூடத்தில் பருவநிலை மாற்றத்துக்கு எதிரான அந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் உடலில் ‘நேரத்தை வீணடிக்க வேண்டாம்’ போன்ற வாசகங்களை எழுதியிருந்தனர். அரசாங்கம் சுற்றுச்சூழல் தொடர்பான அவசரத் தேவைகளைப் புறக்கணித்து வருவதாகவும் ஆர்வலர்கள் கண்டித்தனர்.
பிரெக்சிட் தொடர்பான விவாதங்களில் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேரத்தை விரயமாக்குவதாகவும், நாட்டின் மற்ற பிரச்சினைகளுக்கு நேரம் ஒதுக்குவதில்லை என்றும் அவர்கள் குறைகூறினர்.
Wed, 04/03/2019 - 06:00
from tkn