மூளைச்சாவடைந்த பெண் ஆண் குழந்தை பிரசவம்

போர்த்துக்கல் நாட்டில் கடந்த டிசம்பர் மாதம் மூளைச் சாவு அடைந்த 26 வயது பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

கடுமையான ஆஸ்துமாவால் பாதிப்படைந்த சர்வதேச விளையாட்டு வீராங்கனையான கேத்ரீனா செக்கேரா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மூளைச் சாவு அடைந்தார்.

32 வார கர்ப்பிணியான கேத்ரீனாவுக்கு மகப்பேறு மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த சூழ்நிலையில், அவருக்கு சால்வடார் என்று பெயரிடப்பட்டுள்ள குழந்தை பிறந்துள்ளது.

செய்தியாளர்களிடம் பேசிய கேத்ரீனாவின் தாயார் மரீனா, தனது மகளுக்கு டிசம்பர் 26ஆம் திகதி பிரியாவிடை அளித்ததாகவும், இருப்பினும் தான் தந்தையாவதற்கு அவரது கணவர் புருனோ விரும்பியதால், இத்தனை நாட்கள் அவர் செயற்கை சுவாச கருவியின் உதவியோடு வாழ்ந்ததாகவும் கூறுகினார்.

இதே போன்று கடந்த 2016ஆம் ஆண்டு போர்த்துக்கல் தலைநகரான லிஸ்பனில் தாய் மூளைச் சாவு அடைந்து 15 வாரங்களுக்கு பின்னர் குழந்தை ஒன்று பிறந்தமை குறிப்பிடத்தக்கது.

Mon, 04/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை