பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு, இலங்கைக்கு மாலைதீவு முழுமையாக உதவும் என, மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் முஹமட் சொலிஹ் தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு கலந்துரையாடியபோதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாகத் தெரிவித்த மாலைதீவு ஜனாதிபதி, சகோதர நாடு என்ற வகையில் இலங்கையுடன் மாலைதீவு இச்சந்தர்ப்பத்தில் கைகோர்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், குண்டு வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரார்த்திப்பதாகவும் மாலைதீவு ஜனாதிபதி தெரிவித்தார்.
Sat, 04/27/2019 - 11:14
from tkn