ஐ.பி.எல். தொடரில் முதல் அணியாக சென்னை பிளே ஓப் சுற்றுக்கு தகுதி

12ஆவது ஐ.பி.எல் தொடரின் பிளே ஓப் சுற்றுக்கு முதல் அணியாக சென்னை சுப்பர் கிங்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது.

ஐ.பி.எல் டி20 தொடர் கடந்த மாதம் 23ஆம் திகதி ஆரம்பமானது. இத்தொடரில் ஆரம்பத்தில் இருந்தே நடப்பு சம்பியனான சென்னை சுப்பர் கிங்ஸ் ஆதிக்கம் செலுத்திவந்தது. இருப்பினும் கடைசியாக விளையாடிய 4 லீக் போட்டிகளில் 3இல் தோல்வியடைந்ததால் சென்னை அணி பிளே ஓப் சுற்றுக்கு முன்னேறுமா என்ற நிலை உருவானது.

தற்போது சென்னை அணி 16 புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் முதலிடத்தில் உள்ளது. கடந்த சனிக்கிழமை ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றதால் சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் சென்னை அணி விளையாடிய 10 ஐ.பி.எல் தொடர்களிலும் பிளே ஓப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

Mon, 04/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை