நாடளாவிய ரீதியில் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள மின் துண்டிப்பு பிரச்சினைக்கு, எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டிற்கு முன்னர் தீர்வு காணப்படும் என மின்சக்தி, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
பம்பலப்பிட்டி, மிலாகிரி புனித போல் மகளிர் பாடசாலையில் நேற்று (03) இடம்பெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
2010ஆம் ஆண்டிலிருந்து ஒரு மெகா வோட் மின்சாரமும் தேசிய கட்டமைப்புடன் இணைக்கப்படவில்லை எனத் தெரிவித்த அமைச்சர், மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், நீண்டகாலத் திட்டத்தின் ஊடாக மின்சாரப் பிரச்சினைக்குத் தீர்வு காணத் தான் தயாராகவுள்ளதாகவும், அவர் சுட்டிக்காட்டினார்.
from tkn