சித்திரைப் புத்தாண்டுக் காலத்தில் நீர்வெட்டு மேற்கொள்ளப்பட மாட்டாதென, தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
தற்போது நிலவும் வரட்சியான காலநிலையைக் கருத்திற்கொண்டு சில இடங்களில் கடந்த சில நாட்களாக நீர்வெட்டு மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆயினும், சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு தொடர்ச்சியாக நீரை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
மேலும், நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் பொதுமக்களிடம், நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கேட்டுக்கொண்டுள்ளது.
Fri, 04/05/2019 - 11:39
from tkn