கொல்கத்தா அபார வெற்றி

ராஜஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

சவாய் மான்சிங் அரங்கில் கடந்த ஞாயிறு இரவு நடந்த இப்போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீசியது. ராஜஸ்தான் ரோயல்ஸ் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 139 ஓட்டங்கள் குவித்தது.

அணித்தலைவர் அஜிங்க்யா ரகானே 5 ஓட்டங்கள், ஜோஸ் பட்லர் 37 ஓட்டங்கள் (34 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்), திரிபாதி 6 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். ஸ்டீவன் ஸ்மித் 73 ஓட்டங்கள் (59 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்), பென் ஸ்டோக்ஸ் 7 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

கொல்கத்தா பந்துவீச்சில் அறிமுக வீரர் ஹாரி கர்னி 2 விக்கெட், பிரசித் கிரிஷ்ணா 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து 140 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆரம்ப வீரர்களாக கிறிஸ் லைன், சுனில் நரேன் களமிறங்கினர். ஆரம்ப ஜோடி சிறப்பாக ஆடியது. இதில் 25 பந்துகளை சந்தித்த சுனில் நரேன் 6 பவுண்டரி, 3 சிக்ஸருடன் 47 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். கிறிஸ்லைன் 50 ஓட்டங்களை பெற்றார். 13.5 ஓவர்களில் 140 ஓட்டங்கள் எடுத்து கொல்கத்தா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Tue, 04/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை