இலங்கை குண்டுவெடிப்பு; நியூசிலாந்தின் கிரைஸ்சேர்ச் தாக்குதலுக்கு பதிலடி

நியூசிலாந்தின் கிரைஸ்சேர்ச் பள்ளிவாசலில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு பதில் தாக்குதலாக தேசிய தௌஹீத் ஜமாத் என்ற  இஸ்லாமிய பிரிவினைவாத குழு, உயிர்த்த ஞாயிறு அன்று தாக்குதலை நடத்தியுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவண் விஜேவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

அந்தக் குழு JMI என்ற அமைப்புடன் நெருங்கிய தொடர்பைப் பேணியுள்ளதாகவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவண் விஜேவர்தன மேலும் தெரிவித்தார்.

Tue, 04/23/2019 - 15:15


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை