புதிய கணக்காய்வாளர் நாயகம் கடமையேற்பு

இலங்கையின் புதிய கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட சூலானந்த விக்ரமரட்ன நேற்றுப் பதவியேற்றுக் கொண்டார். அரசியலமைப்புப் பேரவையின் தலைவரும சபாநாயகருமான கரு ஜயசூரிய தலைமையில் இப்பதவியேற்பு நிகழ்வு நடைபெற்றது.

தேசிய கணக்காய்வு அலுவலகத்தில் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட புதிய கணக்காய்வு முறை விரைவில் அங்கீகரிக்கப்படும் என பதவியேற்ற பின்னர் கருத்துத் தெரிவித்த கணக்காய்வு நாயகம் குறிப்பிட்டார்.

கணக்காய்வு நாயகம் திணக்களம் தடயவியல் கணக்காய்வு மற்றும் எதிர்கால கணக்காய்வுகளை பலப்படுத்துவதற்கும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் புதிய தொழில்நுட்பத்துடன் திணைக்களத்தின் செயற்பாடுகளை மேம்படுத்தவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

புதிய தொழில்நுட்பங்களுடன் பாராளுமன்றத்துக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

(மகேஸ்வரன் பிரசாத்)

Tue, 04/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை