பேரினவாத கட்சிகள் தமிழருக்கு எக்காலத்திலும் நன்மைகளை செய்யப்போவதில்லை

பேரினவாத கட்சிகள் தமிழருக்கு எக்காலத்திலும் நன்மைகளை செய்யப்போவதில்லையென தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.  

நாவிதன்வெளி வீரச்சோலை கிராமத்தின் சித்திவிநாயர் ஆலயத்தின் சுற்றுமதிலுக்கான அடிக்கல் நாட்டும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.  

தொடர்ந்து உரையாற்றிய அவர், தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இந்த நாட்டிலே ஆட்சியை தீர்மானிக்கின்ற, மாற்றுகின்ற, நிலைநிறுத்துகின்ற சக்தியாக விளங்குகின்றது  

அந்த வகையிலே இந்த ஆட்சி தமிழ் மக்களுக்கு விரோதமாக செயற்படுமாயின் ஆட்சியை மாற்றியமைக்கின்ற அல்லது ஆட்சியை வீழ்த்துகின்ற சகல முயற்சிகளையும் கூட்டமைப்பு மேற்கொள்ளும்.  

தமிழர்களின் தீர்வு விடையங்களை அரசு புறக்கணிக்குமானால் அல்லது செயற்படுத்த மறுக்குமானால் நிச்சயமாக இந்த ஆட்சியாளர்களை வீட்டிற்கு அனுப்புவதில் முழுமூச்சாக செயற்படும் என்பதனை கூற விரும்புகிறேன்.எங்களது பிரதேசம் ,மாவட்டத்தின் மக்கள் எதிர்நோக்கம் பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்பட வேண்டும்.  

வடகிழக்கில் மூன்றாவது தமிழர்கள் கூடிய மாவட்டமாக அம்பாறை இருந்தாலும். அம்பாறை மாவட்டத்தில் தமிழர்கள் மூன்றாவது இனமாக இருக்கின்றோம்.

இதனை அடிப்படையாகக் கொண்டு நாங்கள் பல தரப்பட்ட பிரதேங்களில் வாழுகின்ற தமிழ் மக்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகளை தீர்க்க வேண்டுமென்றால் நாங்கள் ஒன்றித்து பயணிக்க வேண்டும்.  

தமிழ் மக்களது உரிமைசார்ந்த விடயமாக இருந்தாலும்,அபிவிருத்தி விடயமாக இருந்தாலும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு குரல்கொடுத்து உங்களுடன் சேர்ந்து பயணிக்கின்றது.  

ஏனைய பேரினவாதக் கட்சிகள் என்றும் தமிழர்களின் நலன் சார்ந்து குரல்கொடுத்ததே கிடையாது.  

ஏனைய பேரினவாத கட்சிக்கு பின்னால் போய் செயற்படுகின்றபொழுது எங்களது உரிமைசார்ந்த விடயங்கள் புறக்கணிக்கப்படுகின்ற சந்தர்ப்பம் காணப்படும்.

ஆகவே இதனை அடிப்படையாகக் கொண்டு நாங்கள் தாய்க்கட்சியை பலப்படுத்த வேண்டும் எனக் கூறினார். 

(மணல்சேனை நிருபர்)  

Sat, 04/20/2019 - 10:10


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை