இலங்கை முதலீட்டு சபையின் புதிய தலைவர் நியமனம்

இலங்கை முதலீட்டு சபையின் புதிய தலைவராக மங்கள பி.பீ.யாபா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று (11) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.

இதனிடையே கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் திருமதி சந்திரிக்கா விஜேரத்ன நியமிக்கப்பட்டுள்ளதோடு அவரும் இன்று முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.

 
Thu, 04/11/2019 - 14:16


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை