திருகோணமலை மாவட்டத்தின் பிரதேச செயலகங்களுக்கிடையிலான மாவட்ட மட்ட உதைபந்தாட்ட போட்டி சனிக்கிழமை(20) கந்தளாய் லீலாரத்ன பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.
இப்போட்டியில் கந்தளாயை பிரநிதித்துவப்படுத்தி விளையாடிய ஜாயா அணி கால் இறுதிப் போட்டியை மூதுர் பிரதேச செயலகத்தை பிரதிநிதித்துவப்படுத்திய அணியுடன் விளையாடி 1:1 என்ற கோல் சமநிலையில் பெனல்டி உதை மூலம் வெற்றியை தமதாக்கிக் கொண்டது. அரை இறுதிப் போட்டியை கிண்ணியா அணியுடன் எதிர் கொண்ட கந்தளாய் அணி 2:1 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றியை தமதாக்கி இறுதிப்போட்டியை திருகோணமலை அணியுடன் விளையாடி 1:4 என்ற கோல் வித்தியாசத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது.
மாவட்ட மட்ட சம்பியனாக திருகோணமலை பிரதேசம் தெரிவாகியுள்ளது.
கந்தளாய் தினகரன் நிருபர்
from tkn