மதுபோதையில் வாகனம் செலுத்திய 941 வாகனச் சாரதிகள் கைது

SUG

சித்திரைப் புத்தாண்டுக் காலப்பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 941வாகனச் சாரதிகள் கைதுசெய்யப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

சித்திரைப் புத்தாண்டையொட்டி ஏப்ரல் 11ஆம் திகதி காலை 06.00மணி முதல் ஏப்ரல் 15ஆம் திகதி காலை 06.00மணிவரை பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போதே, இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

அத்தோடு, இக்காலப்பகுதியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 29,461 சாரதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

Tue, 04/16/2019 - 08:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை