தென்னாபிரிக்காவில் வெள்ளம்: 51 பேர் பலி

தொன்னாபிரிக்காவின் டர்பன் நகரில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் குறைந்தது 51 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாட்டின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் கடந்த ஒருசில தினங்களாக பெய்து வரும் கடும் மழையை அடுத்தே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. கரையோரப் பகுதிகளில் தொடர்ந்து வெள்ள அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

நிலச்சரிவினால் சில வீதிகள் இடிந்திருப்பதும் கட்டிடங்கள் சேதமாகி இருப்பது அனத்தங்கள் இடம்பெற்ற பகுதிகளில் எடுக்கப்பட்ட படங்கள் காட்டுகின்றன.

பாதிப்பின் அளவை அதிகாரிகள் தொடர்ந்து மதிப்பிட்டு வருவதாக மாகாண அமைச்சர் நொமுசா டுபே ந்குபே உள்ளுர் வானொலி ஒன்றுக்கு குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து நிண்ட கால அடிப்படையில் மக்கள் அப்புறப்படுத்தப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளை ஜனாதிபதி சிரில் ரமபோசா நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

உயிர்தப்பியவர்களை தேடி இடிபாடுகளில் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

Thu, 04/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை