நெடுந்தீவில் ஆமை இறைச்சியுடன் 50 வயது நபர் கைது

நெடுந்தீவில் ஆமை இறைச்சியுடன் 50 வயது நபர் கைது-Turtle Meat-50 Yr Old Arrested

ஒரு தொகை ஆமை இறைச்சியுடன் சந்தேகத்திற்கு இடமாக நடமாடிய நபரை கடற்படையினா் கைது செய்துள்ளனா்.

நேற்றைய தினம் (03) யாழ். நெடுந்தீவு, குடாவெளி பகுதியில் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக நடமாடுவதாக கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, அவ்விடத்திற்கு சென்றபோது ஒரு தொகை ஆமை இறைச்சியுடன் சந்தேகநபர் தப்பியோட முயற்சித்துள்ளார்.

இதன் போது துரத்திச் சென்ற கடற்படையினர்   குறித்த சந்தேகநபரை கைது செய்து நெடுந்தீவு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

50 வயதுடைய நெடுந்தீவு பிரதேசத்தை சேர்ந்த சந்தேகநபர் கைது செய்யப்படும் போது அவரிடம் இருந்து 5 கிலோ ஆமை இறைச்சி கைப்பற்றப்பட்டுள்ளது.

(புங்குடுதீவு குறுப் நிருபர் - பாறுக் ஷிஹான்)

Thu, 04/04/2019 - 14:29


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை