கழிவுக் குழிக்குள் இறங்கிய 4 பேர் விச வாயு தாக்கி பலி

வவுனியாவில் சம்பவம்

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் மாடறுக்கும் இடத்தில் மாட்டின் கழிவுகள் கொட்டப்படும் குழியை தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்த நகரசபை தொழிலாளர்களில் நால்வர் விச வாயு தாக்கத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது, இக்குழியிலிருந்து கழிவுகளை அகற்றுவதற்காக குழியின் மூடியை திறந்து உள்ளே இறங்கிய ஒருவர் திடீரென மயங்கி உள்ளே விழுந்துள்ளார், அவரை காப்பாற்ற சென்ற ஒவ்வொருவராக மயங்கி குழிக்குள் விழுந்து இறந்துள்ளதாக நேரில் கண்ட சக ஊழியர்கள் தெரிவித்தனர்.  இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(கோவில்குளம் குறூப் நிருபர் - காந்தன் குணா)

Fri, 04/26/2019 - 13:48


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை