வெடிப்புச் சம்பவங்களில் 48 பேர் உயிரிழப்பு; 500 பேர் காயம்

நாட்டின் சில இடங்களில் இன்று இடம்பெற்றுள்ள வெடிப்புச் சம்பவங்களில் இதுவரையில் 48 பேர் உயிரிழந்துள்ளதுடன், 500 பேர் காயமடைந்துள்ளனர்.

கொழும்பில் இடம்பெற்றுள்ள வெடிப்புச் சம்பவங்களில் 23 பேர் உயிரிழந்துள்ளதுடன், 280 பேர் காயமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ள வெடிப்புச் சம்பவத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளதுடன், 75 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு, கட்டுவப்பிட்டிய பகுதியிலுள்ள சென்.செபஸ்தியார் தேவாலயம் ஆகியவற்றிலும், கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டல், சங்ரிலா ஹோட்டல், சினமன் கிராண்ட் ஹோட்டல் ஆகியவற்றிலேயே இன்று (21) காலை வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

Sun, 04/21/2019 - 11:17


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை