பாடசாலை சீருடை வவுச்சருக்கான கால எல்லை மே 31 வரை நீடிப்பு

பாடசாலை மாணவர்களுக்கு சீருடைக்காக வழங்கப்பட்டுள்ள வவுச்சர்களுக்கான உபயோக காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சுத் தெரிவித்தது.  

இதற்கிணங்க மே 31ம் திகதி வரை மாணவர்கள் இதனை உபயோகிக்கும் வகையில் கால நீடிப்புச் செய்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.  

ஏற்கனவே இதற்கான திகதி ஏப்ரல் 20 வரை நீடிக்கப்பட்டிருந்தபோதும் இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் மே 6ம் திகதி திறக்கப்படவுள்ள நிலையைக் கருத்திற்கொண்டே மே 31ம் திகதிவரை இதற்கான கால நீடிப்பைச் செய்துள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது. (ஸ)  

Tue, 04/30/2019 - 08:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை