ஐ.பி.எல் போட்டிகளில் கெயில் 300 சிக்ஸர்

ஐ.பி.எல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் வீரர் கிறிஸ் கெயில் 2 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் ஐ.பி.எல் போட்டியில் மொத்தம் 300 சிக்சர்கள் விளாசி புதிய சாதனை படைத்துள்ளார்.

2019 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் மோதிய நிலையில் பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இப்போட்டியில் பஞ்சாப் வீரர் கெயில் 29 பந்துகளில் 40 ஓட்டங்கள் குவித்தார்.

இதில் இரண்டு சிக்சர்களும் அடங்கும். இதன் மூலம், ஐபிஎல் தொடர்களில் அதிக சிக்சர்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றதோடு, புதிய வரலாற்று சாதனையையும் படைத்துள்ளார்.

கெயில் தற்போது வரை ஐ.பி.எல் போட்டிகளில் மொத்தம் 300 சிக்சர்களை விளாசியுள்ளார்.

Mon, 04/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை