இந்தோனேசியாவில் வெள்ளம்: 29 பேர் பலி; பலரும் மாயம்

இந்தோனேசியாவின் சுமத்திரா தீவில் ஏற்பட்டுள்ள கடும் மழை வெள்ளம் காரணமாக 29 பேர் உயிரிழந்திருப்பதோடு மேலும் பலர் காணாமல்போயுள்ளனர்.

ஒன்பது மாவட்டங்களை பாதித்திருக்கும் இந்த மோசமான காலநிலையால் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள், பாலங்கள் மற்றும் வீதிகள் சேதமாகியிருப்பதோடு சுமார் 12,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

நீர்மட்டம் சில பகுதிகளில் தற்போது குறைந்திருந்தபோதும் பாதிக்கப்பட்ட பகுதிகள் துண்டிக்கப்பட்டிருக்கும் நிலையில் ஏற்பட்டிருக்கும் சேத விபரங்கள் இன்னும் மதிப்பீட்டுக்கு உள்ளாகவில்லை. “இந்த அனர்த்தத்தின் பாதிப்பு இன்னும் அதிகரிக்கலாம்” என்று தேசிய அனர்த்த முகாமை பேச்சாளர் சுடோபோ புர்வோ குறிப்பிட்டுள்ளார்.

“மழைவீழ்ச்சி அதிகரித்தால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளும் அதிகரிக்கலாம்” என்றும் அவர் எச்சரித்தார்.

Tue, 04/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை