போர்த்துக்கலில் சுற்றுலா பஸ் விபத்து: 29 பேர் உயிரிழப்பு

போர்த்துக்கல் தீவான மடெய்ராவில் ஜெர்மன் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்ததில் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.

கனிக்கோ நகருக்கு அருகில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற விபத்தில் மேலும் 27 பேர் காயமடைந்துள்ளனர்.

வீதித் திருப்பம் ஒன்றில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் வீதியை விட்டு விலகியதை அடுத்து விபத்து நேர்ந்திருப்பதாக போர்த்துக்கல் செய்தி நிறுவனமான லுௗசா குறிப்பிட்டுள்ளது.

பள்ளத்தில் சாய்ந்த பஸ் வீடொன்றி கூரை மேல் விழுந்துள்ளது.

ஜெர்மன் சுற்றுலா பயணிகளை ஏற்றிய பஸ்ஸில் உள்ளுர் மக்களும் இருந்துள்ளர். உயிரிழந்தவர்களில் 11 ஆண்கள் மற்றும் 17 பெண்கள் உள்ளனர். காயம் காரணமாக மற்றொரு பெண் மருத்துவமனையில் வைத்து உயிரிழந்துள்ளார்.

Fri, 04/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை