எத்தியோப்பியாவில் 28 நீர்யானைகள் உயிரிழப்பு

ஆபிரிக்க நாடான எத்தியோப்பியாவில் உள்ள தேசியப் பூங்காவில் ஒரே வாரத்தில் 28 நீர்யானைகள் இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தி ஜிபி ஷெலோகோ தேசியப் பூங்காவில் கிட்டத்தட்ட 200 நீர்யானைகள் வளர்க்கப்பட்டு வந்தன. இப்பகுதியில் நீர்யானைகளின் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்துவந்ததால் அதிக பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த 14ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை ஜிபி பூங்காவில் 28 நீர் யானைகள் உயிரிழந்துள்ளன.

இவற்றில் பெரும்பாலானவை வேட்டையாடிகளால் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து விசாரணை நடந்து வருவதாக எத்தியோப்பிய அரசு அறிவித்துள்ளது.

Thu, 04/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை