27 ஆண்டுகளின் பின் கோமாவில் இருந்து நினைவு திரும்பிய பெண்

ஐக்கிய அரபு இராச்சியத்தில் 27 ஆண்டுகள் கோமா நிலையில் இருந்த பெண் ஒருவர் நினைவு திரும்பியுள்ளார்.

1991 ஆம் ஆண்டு முனிரா அப்துல்லா என்ற அந்தப் பெண் தனது மகனை பாடசாலையில் இருந்து அழைத்து வரும்போது அவர் பயணம் செய்த கார், பஸ் ஒன்றின் மீது மோதி விபத்துக்கு உள்ளானது. இதனால் அவர் பலத்த காயத்திற்கு உள்ளானார்.

அப்போது முனிராவுக்கு வயது 32 ஆக இருந்ததோடு மகன் உமருக்கு 4 வயதாக இருந்தது.

விபத்து நடந்த நேரத்தில், முனிராவின் கணவரின் தம்பி அந்த காரை ஓட்டியுள்ளார். முனிராவும் அவரது மகனும் பின் இருக்கையில் அமர்ந்திருந்தனர். தனது மகனை முனிரா அரவணைத்து கொண்டதால் அவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

முனிராவுக்கு 27 வருடங்கள் கழித்து கடந்த வருடம் மருத்துவமனையில் நினைவு வந்துள்ளது. செய்தித்தாள் நேர்காணல் ஒன்றில் அந்த விபத்து குறித்தும், தனது தாயின் சிகிச்சை குறித்தும் இந்த செய்தியினை பகிர்ந்துள்ளார் உமர்.

“ஒருநாள் நிச்சயமாக அவர் கண் விழிப்பார் என்று நான் நம்பினேன். எனது நம்பிக்கையை நான் இழக்கவில்லை” என்று உமர் தெரிவித்துள்ளார்.

”உங்களின் அன்பிற்குரியவர்களுக்கு இம்மாதிரியான நிலை ஏற்பட்டால் உங்களின் நம்பிக்கையை கைவிடாதீர்கள் என்பதை தெரிவிக்கவே இப்போது நான் இந்த செய்தியை பகிர்ந்துள்ளேன்” என்று மேலும் தெரிவித்துள்ளார்.

தற்போது 60 வயதாகும் முனிரா கோமா நிலையில் இருந்து விழித்து திடீரென்று தனது பெயரைச் கூறி அழைத்ததாக மகன் குறிப்பிட்டுள்ளார்.

லண்டன், ஐக்கிய அரபு இராச்சிய மருத்துவமனைகளில் மாறி மாறி சிகிச்சை பெற்று வந்த முனிராவுக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஜெர்மனியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற அரசாங்க மானியம் கிடைத்தது.

ஜெர்மனியில் சிகிச்சை பெற்று வந்த பின்னரே முனிரா தற்போது நினைவு திரும்பியுள்ளதாக அவரது மகன் தெரிவித்தார்.

Thu, 04/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை