25 வருடங்களின் பின்னர் சாவகச்சேரி வந்த சடலம்

இத்தாலி நாட்டில் நோய்வாய்ப்பட்டு இறந்தவரின் சடலம் 25 வருடங்களின் பின்னர் யாழ்.சாவகச்சேரிக்கு எடுத்து வரப்பட்டுள்ளது.

யாழ்.சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த எம். ஸரீபன் ஜோகி என்பவர் இத்தாலி நாட்டிற்கு சென்று அங்கு தொழில் புரிந்து வந்த நிலையில் கடந்த 1994ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் திகதி 49 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். அவர் தனது இறுதி ஆசையாக தான் உயிரிழந்த பின்னர் தனது உடலை தனது சொந்த ஊரான சாவகச்சேரிக்கு எடுத்து சென்று அங்கு அடக்கம் செய்ய வேண்டும் என உறவினர்களிடம் கோரியிருந்தார். அக் கால பகுதியில் இலங்கை யில்

உள்நாட்டு யுத்தம் தீவிரம் அடைந்திருந்தமையால் அவரது உடலை இலங்கை கொண்டு வருவதில் பல சிரமங்கள் காணப்பட்டன. இதனால் உறவினர்கள் அவரது உடலை 25 வருடங்களுக்கு பாதுகாக்க நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைத்தனர்.

இந் நிலையில் இலங்கையில் சமாதான கால பகுதி மற்றும் 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் உடலை இலங்கை கொண்டுவர உறவினர்கள் முயற்சித்த போதும் 25 வருட கால ஒப்பந்தம் உள்ளமையால் மீள பெறுவதில் சிக்கல் காணப்பட்டதை தொடர்ந்து அம் முயற்சி கைவிடப்பட்டது.

இவ்வாறான நிலையில் தற்போது 25 வருடங்கள் கடந்த நிலையில் அவரது சடலத்தை பெற்று உறவினர்கள் இலங்கை கொண்டு வந்துள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அவரது உடல் சாவகச்சேரியில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டுவரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்ததுடன் மாலை அவரது இறுதி விருப்பத்தின் படி சாவகச்சேரியில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கரவெட்டி தினகரன் நிருபர்

Mon, 04/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை