ஊழல், மோசடி பற்றிய ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை 22இல்

ஊழல்,மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள் எதிர்வரும் 22ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.   கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளுக்கிணங்க முதற்கட்ட விசாரணைகளுக்காக அமைச்சர்கள் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் சிலரும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் அடுத்த சில வாரங்களுக்குள் ஆஜராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது  

இதேவேளை, ஊழல்,மோசடிகள் விசாரணைகளுக்கான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு மேலும் 6பொலிஸ் அதிகாரிகள் உள்ளடங்கிய பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.  

இதற்கமைய, ஆணைக்குழுவின் முதற்கட்ட விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் பிரிவில் 18உத்தியோகத்தர்கள் உள்ளடங்குகின்றனர்.    மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் மருந்து கொள்வனவின் போதும் பசுக்கள் இறக்குமதியிலும் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள், காப்புறுதி தொடர்பில் கிடைத்துள்ள முறைப்பாடுகள் குறித்து எதிர்வரும் 22ஆம் மற்றும் 23ஆம் திகதிகளில் சாட்சி விசாரணைகள் இடம்பெறவுள்ளன. (ஸ) 

(லோரன்ஸ் செல்வநாயகம்)

Thu, 04/18/2019 - 09:47


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை