பெருவில் பஸ் வண்டி தீப்பிடித்து 20 பேர் பலி

பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் இருந்து புறப்பட்டுச் சென்ற இரட்டை அடுக்கு பஸ்ஸில் தீப்பிடித்த விபத்தில் 20 பயணிகள் உயிரிழந்தனர்.

பஸ் வண்டியின் பிற்புறத்தில் தீப் பிடித்து அது வேகமாக உட்பகுதிக்கு பரவியதாக பார்த்தவர்கள் விபரித்துள்ளனர். 100 பயணிகளுடன் சிக்லாயோ நகரை நோக்கி கடந்த ஞாயிற்றுக்கிழமை புறப்பட்ட பஸ் வண்டியே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

சில நொடிகளுக்குள் பஸ்சின் இருக்கைகள் வழியாக வேகமாக பரவிய தீயில் பயணிகள் சிக்கிக் கொண்டுள்ளனர். குறிப்பாக, மேல் அடுக்கு படுக்கையில் இருந்த பயணிகள் கீழே இறங்கி வர முடியாமல் தவித்துள்ளனர். இந்நிலையில பயங்கர சப்தத்துடன் பஸ்சின் ஒரு பகுதி வெடித்து சிதறியதாக பார்த்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விபத்தில் 20 பயணிகள் உடல் கருகி உயிரிழந்தனர்.

காயங்களுடன் பலர் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tue, 04/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை