ஒரு கிலோ கிராம் C4 வெடிமருந்துடன், கடற்படையினரால் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெள்ளவத்தை புகையிரத நிலையத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முச்சக்கர வண்டியொன்றை சோதனையிட்டபோது, அதிலிருந்து ஒரு கிலோ கிராம் C4 வெடிமருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக, கடற்படை பேச்சாளர் இசுரு சூரிய பண்டார தெரிவித்தார்.
இது தொடர்பில், குறித்த முச்சக்கர வண்டியை கைப்பற்றியுள்ளதோடு, அதில் பயணித்த மூவரை கைது செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இது தொடர்பான விசாரணைகளை, கடற்படையுடன் இணைந்து வெள்ளவத்தை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.
(எமது SMS செய்தி சேவையில் தடங்கல் ஏற்பட்டுள்ளதால், REG THINAKARAN -> 77000 வழியாக பதிவு செய்துள்ளோர் தொடர்ந்தும் எம்முடன் இணைந்திருங்கள்; சீர் செய்யும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றன)
Fri, 04/26/2019 - 23:21
from tkn