இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 18பேர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை வெளிச்சவீட்டுக் கடற்பகுதியிலிருந்து 16கடல் மைல் தொலைவில் இவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, நேற்று (04) கைதுசெய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
அத்துடன், இவர்கள் பயன்படுத்திய 3 படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
Fri, 04/05/2019 - 10:02
from tkn