சட்டவிரோதமாக மீன்பிடித்த 18 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 18பேர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை வெளிச்சவீட்டுக் கடற்பகுதியிலிருந்து 16கடல் மைல் தொலைவில் இவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, நேற்று (04)  கைதுசெய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

அத்துடன், இவர்கள் பயன்படுத்திய 3 படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

Fri, 04/05/2019 - 10:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை