மே மாதம் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் விபரம் வரும் 15ஆம் திகதி மும்பையில் அறிவிக்கப்படவுள்ளது.
எம்.எஸ்.கே பிரசாத் தலைமையிலான தேர்வு குழு 15 வீரர்களை தேர்வு செய்து அறிவிக்கவுள்ளது. 4ஆவது வீரர் வரிசை, சகலதுறை வீரர், சுழற்பந்து வீரர்கள், 2ஆவது விக்கெட் காப்பாளர் ஆகியவை தேர்வு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
உலக கிண்ண கிரிக்கெட் போட்டி மே மாதம் 30ஆம் திகதி முதல் ஜூலை 14ஆம் திகதி வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது.
இதில் நடப்பு சாம்பியன் அவுஸ்திரேலியா, இந்தியா, தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.
இந்திய அணி ஆரம்ப ஆட்டத்தில் ஜூன் 5ஆம் திகதி தென்னாபிரிக்காவை சந்திக்கிறது.
from tkn