வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தோர் 138ஆக உயர்வு

நாட்டின் சில இடங்களில் இன்று இடம்பெற்றுள்ள வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 138ஆக உயர்வடைந்துள்ளதாக, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் அனில் ஜயசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 49பேர்  உயிரிழந்துள்ளதுடன்,  200பேர் காயமடைந்துள்ளனர்.

நீர்கொழும்பில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 62பேர் உயிரிழந்துள்ளதுடன், 110பேர் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை, மட்டக்களப்பில் இடம்பெற்ற  வெடிப்புச் சம்பவத்தில் 27பேர் உயிரிழந்துள்ளதுடன், 77பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு, கட்டுவப்பிட்டிய பகுதியிலுள்ள சென். செபஸ்தியார் தேவாலயம், மட்டக்களப்பு செவோன் தேவாலயம்  ஆகியவற்றிலும், கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டல், 'ங்ரிலா ஹோட்டல், சினமன் கிராண்ட் ஹோட்டல் ஆகியவற்றிலும் இன்று (21) காலை வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

Sun, 04/21/2019 - 12:51


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை