பலஸ்தீனத்திற்கு 100 மில். டொலர் வழங்குவதற்கு அரபு லீக் உறுதி

இஸ்ரேல் வரிப் பரிமாற்றத்தை இந்த ஆண்டு ஆரம்பத்தில் முடக்கியதால் ஏற்பட்டிருக்கும் இடைவெளியை நிரப்புவதற்கு பலஸ்தீன அதிகார சபைக்கு மாதத்திற்கு 100 மில்லியன் டொலர்களை வழங்க அரபு லீக் உறுதி அளித்துள்ளது.

“முகம்கொடுக்கும் அரசியல் மற்றும் பொருளாதார அழுத்தங்கள் தொடர்பில், பலஸ்தீன அரசின் பட்ஜட்டுக்கு அரபு நாடுகள் உதவும் என்று நாம் உறுதி அளிக்கிறோம்” என்று கெய்ரோவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கூடிய அரபு லீக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

பலஸ்தீன அதிகாரசபை சார்பில் இஸ்ரேல் வரி சேகரித்தபோதும் இஸ்ரேல் சிறையில் இருந்து பலஸ்தீன அரசியல் கைதிகளுக்கு பலஸ்தீனம் கொடுப்பனவுகளை வழங்குவது தொடர்பில் இஸ்ரேல் கடந்த பெப்ரவரியில் 138 மில்லியன் டொலர் தொகையை முடக்கி வைத்துள்ளது.

Tue, 04/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை