ஏப்ரல் 03: போதைக்கு எதிராக சத்தியப்பிரமாணம் செய்ய அழைப்பு

போதைப் பொருளுக்கு எதிராக சத்தியப்பிரமாணம் செய்ய அழைப்பு-Oath Against Drug On April 03rd-MLA M Hizbullah

எதிர்வரும் ஏப்ரல் 03 திகதி காலை 8.30 மணிக்கு கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல பாடசாலைகளிலும் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் "போதைப்பொருள் பாவனைக்கு எதிராக செயற்படுவோம்" என சத்தியப்பிரமாணம் செய்யுமாறு கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் அழைப்பு விடுத்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்  பணிப்புரைக்கு அமைய, ஜனாதிபதி செயலகத்தினால், நாடு முழுவதிலும் உள்ள சகல பாடசாலைகளிலும், சகல அரச காரியாலயங்களிலும், சகல திணைக்களங்களிலும், சகல அமைச்சுகளிலும் நாளை மறுதினம் (03) காலை 8.30 மணிக்கு "நாங்கள் போதை ஒழிப்புக்கு எதிராக செயற்படுவோம்" என சத்தியப்பிரமாணம்  செய்யுமாறு சுற்றுநிருபம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தலைமையில் இதன் பிரதான வைபவம் சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறவுள்ள நிலையில், கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல பாடசாலைகளிலும், சகல அரச நிறுவனங்களிலும், காரியாலயங்களிலும், ஜனாதிபதி செயலகத்தினால் அனுப்பப்பட்ட சுற்றுநிருபத்திற்கு அமைவாக உறுதிப்பிரமானம் எடுக்கும்படி கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

(வெல்லாவெளி தினகரன் நிருபர்-க. விஜயரெத்தினம்)

Mon, 04/01/2019 - 17:36


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை