IMF; கடன் திட்டம் மேலும் ஒரு வருடத்திற்கு நீடிப்பு

5ஆம் தவணைக் கடனை வழங்கவும் இணக்கம்

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான  கடன் திட்டத்தை மேலும் ஒரு வருடத்துக்கு நீடிக்க சர்வதேச நாணய நிதியம் இணங்கியுள்ளது. அதற்கமைய, மூன்று வருடத்திற்கான இக்கடன் திட்டம் நான்கு வருடமாக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை சர்வதேச நாணய நிதியம், மற்றொரு தவணைக்குரிய 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் திட்டத்தை நீடிக்கவும் ஒப்புக்கொண்டுள்ளது. 

இலங்கைக்கான  கடன் திட்டத்தின் 5ஆம் தவணைக் கடனை வழங்கவே இவ்வாறு இணக்கம் தெரிவித்துள்ளது.

 

 

Fri, 03/01/2019 - 13:39


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை