அமெரிக்காவின் சியேட்டல் நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டு மேலும் இருவர் காயமடைந்தனர்.
சியேட்டல் நேரப்படி புதன்கிழமை மாலை 4 மணியளவில் அந்தச் சம்பவம் நடந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆடவர் ஒருவர் வீதிகள் சந்திக்கும் இடத்தில் இருந்த வாகனத்தின் பெண் ஓட்டுநரை அணுகி அவரைச் சுட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அந்த ஆடவர், அருகிலிருந்த பஸ் ஒன்றின் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளார். சுடப்பட்ட நிலையிலும் கூட பஸ்ஸை ஓட்டுநர் செலுத்தியதால் பயணிகள் எவரும் பாதிக்கப்படவில்லை.
அதே வேளையில், துப்பாக்கிதாரி இன்னொரு வாகனத்தின் ஓட்டுநரைச் சுட்டுக் கொன்றதாகத் தெரிவிக்கப்பட்டது. சந்தேக நபர், அந்த வாகனத்தைக் கைப்பற்றி, மற்றுமொரு வாகனத்தை மோதி அதன் ஓட்டுநரைக் கொன்றதாகவும் கூறப்பட்டது.
அந்த ஆடவரைப் பின் தொடர்ந்த பொலிஸ் அதிகாரிகள் சிறிது நேரப் போராட்டத்திற்குப் பின்னர் அவரைக் கைது செய்தனர். அந்த ஆடவரின் நோக்கம் என்ன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. பெண் ஓட்டுநரும் பஸ் ஓட்டுநரும் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்
from tkn