இந்தியாவும் பாகிஸ்தானும் இராணுவ நடவடிக்கையை கைவிட வேண்டும்

பென்டகன், கனடா வலியுறுத்து

இந்தியாவும் பாகிஸ்தானும் இராணுவ நடவடிக்கையை கைவிட வேண்டுமென அமெரிக்க இராணுவ தலைமையகம் பென்டகன் வலியுறுத்தியுள்ளது. புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவும் தற்போதைய சூழல் கவலை அளிப்பதாகவும் இரு நாடுகளும் இராணுவ நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டுமென்றும் அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகன் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து பென்டகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இந்தியா _ -பாகிஸ்தான் பதற்றம் தொடர்பில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், மத்திய பாதுகாப்பு படை கமாண்டர் ஜோசப் வோட்டல் மற்றும் அதிகாரிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் (பொறுப்பு) பேட்ரின் ஷானகான் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

பதற்றத்தை தணிப்பதில் அமைச்சர் ஷானகான் கவனம் செலுத்தி வருகிறார். இரு நாடுகளும் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எல்லையில் இயல்பு நிலை திரும்புவதற்கு இந்தியாவும், பாகிஸ்தானும் எல்லை தாண்டிய அனைத்து இராணுவ நடவடிக்கைகளையும் கைவிட வேண்டுமென அமெரிக்க வெளியுறவுத்துறையும் வலியுறுத்தி உள்ளது. பதற்றத்தை தணிப்பதற்கு நேரடி பேச்சுவார்த்தை உள்ளிட்ட நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

இதேபோல் இரு நாடுகளும் இராணுவ நடவடிக்கைகளை கைவிட்டு பதற்றத்தை தணிக்க வேண்டும் என்று கனடாவும் கேட்டுக்கொண்டுள்ளது.

Fri, 03/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை