இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை 5.15 மணி அளவில் பொரளை, கிங்ஸி வீதி - ஹோட்டன் பிளேஸ் சந்தியில், கார் ஒன்றும் முச்சக்கரவண்டியும் modi இடம்பெற்ற விபத்தில், முச்சக்கரவண்டியின் சாரதி சிறு காயங்களுக்குள்ளாகி சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த காரை இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன செலுத்தி வந்துள்ளதோடு, இதன்போது அவர் மது போதையில் இருந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து காரை செலுத்தி வந்த திமுத் கருணாரத்ன பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
Sun, 03/31/2019 - 08:59
from tkn