மோட்டார் வாகனத் திணைக்களம் சனிக்கிழமைகளில் இயங்கும்

மோட்டார் வாகனத் திணைக்களம் மற்றும் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் ஆகியன சனிக்கிழமைகளில் இயங்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்குச் சிறந்த சேவைகளை  வழங்கும் முகமாகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், இன்று முதல் இச்சேவைகள் அமுலில் இருக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மக்களுக்கு வழங்கப்பட்ட சேவைகளை சீர்செய்ய போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் அறிவுறுத்தலுக்கமைய இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய வேரஹெரவிலுள்ள மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்திலும், நுகேகொடையிலுள்ள தேசிய போக்குவரத்துத் திணைக்களத்திலும் பொதுமக்கள் சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

சாரதி அனுமதிப்பத்திரங்களை புதுப்பித்தல், சாரதி  அனுமதிப்பத்திரங்களுக்கு  விண்ணப்பித்தல், சாரதி அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளல்,  சாரதி அனுமதிப்பத்திரங்களைப் பெறுவதற்குத் தேவையான மருத்துவச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளல் உள்ளிட்ட சேவைகளை  முன்னெடுக்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Thu, 03/14/2019 - 13:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை