அநுராதபுரம்-ஹொரவ்பொத்தானை பிரதேசத்தில் சுத்தமான குடிநீரை வழங்கும் நோக்குடன் நகர திட்டமிடல் நீர் வழங்கள் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் இன்று (02) சுத்தமான குடிநீர் திட்டங்களை ஆரம்பித்து வைத்தார்.
"காரணம் அறியப்படாத நீண்ட கால சிறுநீரக நோய் பரவலை மட்டுப்படுத்தல்" திட்டத்தின் கீழ் ஹொரவ்பொத்தானை, கடவத் றத்மலை கிராமத்தில் இன்றைய தினம் (02) இதன் முதலாவது திட்டம் திறந்து வைக்கப்பட்டது.
ரூபா 2 மில்லியன் (ரூ. 2,266,040) செலவில் நிர்மாணிக்கப்பட்ட இத்திட்டத்தினை அமைச்சர் ரவூப் ஹக்கீம் திறந்துவைத்தார்.
இதேவேளை இன்றைய தினம் பத்தாவ, கிவுளக்கட, மதவாச்சி, கஹடகஸ்திகிலிய மற்றும் நாச்சியாதீவு போன்ற பகுதிகளில் குடிநீர் திட்டங்களை ஆரம்பித்து வைக்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான், ஐக்கிய தேசிய கட்சி ஹொரவ்பொத்தான தொகுதி அமைப்பாளருமான பீ. சஹீது, அரசியல் தலைவர்கள், மற்றும் அரச அதிகாரிகள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
(ரொட்டவெவ குறூப் நிருபர் - அப்துல்சலாம் யாசீம்)
from tkn