சிறைச்சாலைக் காவலர்கள், ஜெயிலர்கள், புனர்வாழ்வளிப்பு அதிகாரிகள் 1,275 பேரை புதிதாக சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய ஆண் சிறைக்காவலர்கள் 1068 பேரையும், பெண் சிறைக்காவலர்கள் 110 பேரையும், இரண்டாம் நிலை ஆண் ஜெயிலர்கள் 69 பேரையும், இரண்டாம் நிலை பெண் ஜெயிலர்கள் 10 பேரையும். இரண்டாம் நிலை ஆண் புனர்வாழ்வளிப்பு அதிகாரிகள் 15 பேரையும், இரண்டாம் நிலை பெண் புனர்வாழ்வளிப்பு அதிகாரிகள் 3 பேரையும் சேவையில் இணைத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள் நாளை (29) வர்த்தமானியில் வெளியிடப்படும் என்பதோடு, விண்ணப்படிவங்கள் எதிர்வரும் ஏப்ரல் 22 ஆம் திகதிவரை ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் சிறைச்சாலைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
from tkn