இவ்வாண்டில் இருவருக்கு இலக்கிய நோபல் பரிசு

கடந்த ஆண்டு விட்டுப்போன இலக்கியத்திற்கான நோபல் பரிசையும் சேர்த்து இவ்வாண்டு இரண்டு பரிசுகளை வழங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

2018, 2019க்கான இரண்டு நோபல் பரிசுகளும் இவ்வாண்டு வழங்கப்படவுள்ளது.

நோபல் பரிசு பெறும் இலக்கியவாதியை தேர்வு செய்யும் ஸ்வீடிஷ் இலக்கிய குழுவின் பாலியல் முறைகேடுகள் தொடர்பான சர்ச்சை எழுந்ததையடுத்து கடந்த ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படவில்லை. இதையடுத்து ஸ்வீடிஷ் இலக்கிய குழுவுக்கும் நோபல் அறக்கட்டளைக்கும் இடையே 233 ஆண்டுக்கால உறவில் விரிசல் ஏற்பட்டது.

இந்தக் குழுவின் சில முக்கிய உறுப்பினர்கள் இராஜினாமா செய்தனர். பாலியல் வன்கொடுமை வழக்கில் புகைப்பட நிபுணரான ஜீன் கிளாட் அர்னால்ட்டுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவர் மனைவியான கவிஞர் கத்தரினா குழுவை விட்டு விலகினார். இதையடுத்து புதிய உறுப்பினர்களுடன் கமிட்டி சீரமைக்கப்பட்டது.

இதனால் கடந்த ஆண்டுக்கும் சேர்த்து இந்த ஆண்டு இரண்டு பேருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படவுள்ளது.

Thu, 03/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை